Friday, September 20, 2024
Home » பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறுவதை நம்ப வேண்டாம்; ரஷ்யப் படைகள் இடம்பெயர்தல் வேறு; திரும்ப பெறுதல் வேறு: அமெரிக்கா, உக்ரைன் ராணுவம் எச்சரிக்கை

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறுவதை நம்ப வேண்டாம்; ரஷ்யப் படைகள் இடம்பெயர்தல் வேறு; திரும்ப பெறுதல் வேறு: அமெரிக்கா, உக்ரைன் ராணுவம் எச்சரிக்கை

by kannappan

கீவ்: இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறுவதை நம்ப வேண்டாம் என்றும், படைகள் இடம்பெயர்தல் வேறு; திரும்ப பெறுதல் வேறு என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. அதேபோல், ரஷ்யப் படைகள் வாபஸ் பெற்றதாக கூறுவதை நம்பவில்லை. இதனால் போர் பதற்றம் நீடிக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யப்படையினனர் நடத்தும் போர்த் தாக்குதல்கள் 34 நாட்களை கடந்துள்ள நிலையில், தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக பெலாரஸில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழலில் இரு நாடுகளுடனும் கருங்கடல் எல்லையை பகிர்ந்து வரும் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இஸ்தான்புல் நகரில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஷ்ய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அலெக்சாண்டர் போமின் கூறுகையில், ‘இருதரப்பு பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. உக்ரைன் வேறு நாடுகளுடன் சேர்ந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற ரஷ்யாவின் நிலைப்பாட்டை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் கீவ் அருகே செர்னிவ் பகுதியில் எங்களது படைகளை குறைக்க உள்ளோம்’ என்றார். அதனால் கீவ் மற்றும் செர்னிவ் நகரங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தெற்கு உக்ரைன் துறைமுக நகரமான மைகோலாய்வில் உள்ள அரசு கட்டிடத்தை ரஷ்ய ராக்கெட்டுகள் தாக்கின. இஸ்தான்புல்லில் நடந்த உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் கோடீஸ்வரர் ரோமன் அப்ரமோவிச் கலந்து கொண்டார். இவர் கடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற போது, அவருடன் சேர்ந்த மேலும் இருவருக்கு விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், உக்ரைன் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘கீவ் மற்றும் செர்னிவ் பகுதியில் ரஷ்யப் படைகள் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை நாங்கள் நம்பவில்லை. கிழக்கு உக்ரைனில் தங்களது தாக்குதல்களை தீவிரப்படுத்த வசதியாக தற்ேபாது இந்த வாபஸ் அறிவிப்பு வந்துள்ளது. ரஷ்யப் படைகள் மீண்டும்  ஒருங்கிணைவதற்கான அறிகுறிகள் அதிகளவில் உள்ளன. ராணுவ துருப்புக்களை திரும்பப்  பெறுதல் என்று கூறப்படுவது, படைகளை சுழற்சி முறையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதுகிறோம். மேலும் உக்ரைன் ராணுவத் தலைமையை தவறாக வழிநடத்துவதை  நோக்கமாகக் கொண்டது’ என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே ெவள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘கீவ்வின் புறநகர் பகுதியில் இருந்த ரஷ்யப் படைகள், அங்கிருந்து வெளியேறி வருகின்றன. ஆனால்  அவர்கள் மீண்டும் அங்கு குவிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது நடக்கும் செயல்களை பார்க்கும் போது, அவர்கள் மீண்டும் படைகளை அங்கு குவிக்க உள்ளனர். படைகளை அவர்கள் திரும்ப பெறவில்லை. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுவதை யாரும் நம்பி ஏமாற வேண்டாம். களத்தில் என்ன நடக்கிறது என்பதை கூர்மையாக காண வேண்டும். கீவ் நகரை விட்டு சிறிய எண்ணிக்கையிலான துருப்புக்கள் மட்டும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. அவை, நாட்டின்  பிற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த படைகள் வடக்கு நோக்கி நகர்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.போரில் தோற்ற ரஷ்யாஇங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ரஷ்யப் படைகள் தோல்வியடைந்து விட்டது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. உக்ரைன் படைகளின் தொடர் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்துள்ளது. கீவ்வைச் சுற்றி வளைக்கும் நோக்கத்தில் ரஷ்யப் படைகள் தோல்வியடைந்துவிட்டன. கீவ் நகரைச் சுற்றி ராணுவ நடவடிக்கைகளைக் குறைப்பதாக ரஷ்யா கூறுவதை வைத்து பார்க்கும் போது, அந்த நாடு தனது பலத்தை இழந்துள்ளது என்பதை காட்டுகிறது. இருந்தாலும், ரஷ்யப் படைகள் தற்போது தனது போர் பலத்தை வடக்கில் இருந்து கிழக்கில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் நகரங்களில் செலுத்தும் என்பதால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன்நேட்டோ உறுப்பு நாடுகளில் உக்ரைன் சேர விருப்பம் தெரிவித்து வரும் விவகாரத்தால் தற்போது ரஷ்யப் படைகள் அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. இந்த நிலையில் நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு வரும் ஏப்ரல் 6 மற்றும் 7ம் தேதிகளில் பிரஸ்ஸல்ஸில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு உக்ரைன் அழைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜார்ஜியா, பின்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு ஆகிய உறுப்பினர் அல்லாத நாடுகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

12 + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi