மோகனூர்: மோகனூரில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலில், ஆண்டு தோறும் திருமலையில் ஒரு நாள் வைபவம் நடப்பது வழக்கம். நேற்று, திருமலையில் (திருப்பதி) பெருமாளுக்கு அதிகாலை முதல், இரவு வரை நடக்கும் சிறப்பு தரிசன பூஜை, இங்கு எழுந்தருளியுள்ள கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாளுக்கு நடத்தப்பட்டது. இரவு பள்ளியறையில் (கண்ணாடி அறையில்) பெருமாள் எழுந்தருளினார். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, செயல் அலுவலர் செந்தில்குமார், ஆய்வாளர் சுந்தர் செய்திருந்தனர். விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.