பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 132 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பழங்கள் வழங்கல்

 

அவிநாசி: அம்பேத்கர் 132வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 132 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஏபிஆர் மூர்த்தி தலைமை தாங்கினார். பழக்கடை குமார் முன்னிலை வகித்தார். இதில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பழ.சண்முகம், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நித்யா, பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தாமணி வேலுச்சாமி, காளிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா வடிவேல், நிலா டிஜிட்டல் நவின் குமார், தொண்டைமான், ரங்கசாமி, ஒர்க்சாப் குமார், சதீஸ் ரவி, சுந்தரம் மற்றும் விசிக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்