பெரியார் சிலைக்கு அவமரியாதை: இந்து முன்னணியினர் 2 பேர் கைது

கோவை: கோவை வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பெரியார் சிலைகடந்த 9ம் தேதி இரவு அவமதிக்கப்பட்டிருந்தது.  இந்த விவகாரம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அங்கேயிருந்த வணிக வளாகத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததில் பெரியார் சிலையை அவமதிப்பு செய்தது வெள்ளலூர் பகுதியை சேர்ந்த ஒர்க் ஷாப் தொழிலாளி மோகன்ராஜ் (27), ஆட்டோ டிரைவர் அருண் கார்த்திக் (32) என்பதும், அவர்கள் இந்து முன்னணி அமைப்பில் டிவிசன் உறுப்பினராக உள்ளதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்….

Related posts

மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை, வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

திருச்சூர் ஏ.டி.எம். கொள்ளையர்கள் ஆற்றில் வீசிய ஆயுதங்கள், பொருட்களை மீட்ட கேரள போலீசார்