பெரியகுளத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வுக் கூட்டம்

பெரியகுளம், ஜூலை 19: பெரியகுளம் நகர்மன்ற அலுவலக கூட்டரங்கில், பெரியகுளம் வட்ட அளவிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் எம்எல்ஏ சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. பெரியகுளம் சார்-ஆட்சியர் முத்து மாதவன் முன்னிலை வகித்தார். தேவதானப்பட்டி பேரூராட்சி , வடுகபட்டி பேரூராட்சி, தென்கரை பேரூராட்சி, கெங்குவார்பட்டி பேரூராட்சி, தாமரைக்குளம் பேரூராட்சி ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் 17 ஊராட்சிகள், பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், பெரியகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல், பிடிஓக்கள் ஜெகதீசன், விஜயமாலா, நகராட்சி ஆணையாளர் கணேசன், பேரூராட்சி தலைவர்கள் தாமரைக்குளம் பால்பாண்டி, வடுகபட்டி நடேசன், தேவதானப்பட்டி முருகேஸ்வரி ராமையா, தென்கரை நாகராஜ், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ராஜாராம், பெரியகுளம் வட்டார மருத்துவ அலுவலர் கோமதி, பெரியகுளம் வட்டாட்சியர் அர்ஜுனன், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், விஏஓக்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை