பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக இளம்வாக்காளர்கள் சேர்ப்பு கலெக்டர், சப்-கலெக்டருக்கு விருது சென்னையில் இன்று வழங்கப்படுகிறது

பெரம்பலூர்: இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் அதிக இளம் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்ததற்காக பெரம் பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், சப்.கலெக்டர் கோகுல் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் இன்று விருது வழங்குகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி இருந்த மொத்த வாக்காளர்கள் 5,62,499 பேர். கடந்த 22 ம் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டிய லின்படி மொத்த வாக்கா ளர்களாக 5,71,748 பேர் உள்ளனர். சிறப்பு சுருக்கத் திருத்த பணிகளின் மூலம் புதிதாக சேர்க் கப்பட்ட மொத்த வாக்காளர்கள் 9,249 பேராவர். இதில் இளம் வாக்காளர்கள், அதாவது 18 – 19 வயதினர் 7,499 பேர் ஆவர். புதிதாக சேர்க்கப் பட்ட வாக்காளர்களில் சுமார் 80 சதவீதம் பேர் இளம் வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை