பெரம்பலூர் சிவன் கோயிலில் சேக்கிழார் குரு பூஜை விழா

 

பெரம்பலூர், ஜூன் 11: பெரம்பலூர் சிவன் கோயிலில் சேக்கிழார் குரு பூஜை விழா நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சியில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்ம புரீஸ் வரர் கோயிலில் தனி மண்டபத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராக எழுந் தருளி அருள் பாலித்து வரும் சேக்கிழார் குரு பூஜை விழா நேற்று காலை 11:30 மணிய ளவில்நடைபெற்றது.

இந்த குருபூஜையை முன்னிட்டு பால், தயிர், சந்தனம்,பழ வகைகள், வாசனை திரவி யங்கள் உடன் சிறப்பு அபி ஷேகம் முடித்து, பகல் 1 மணி அளவில் மங்கள வாத்தியம் முழங்க மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழாவில், ராஜமாணிக்கம், மணி, வைத்தீஸ்வரன், வார வழிபாட்டு குழுவினர், சிவனடியார்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கோயிந்தராஜ னும், பூஜைகளை கவுரி சங்க சிவாச்சாரியாரும் செய்திருந்தனர். இதில் பெரம்பலூர், துறைமங்க லம், அரணாரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிவ பக்தர்கள் திர ளாக கலந்துகொண்டனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்