பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் வீட்டில் புகுந்து ரூ.1.30 லட்சம் ரொக்கம் திருடி விட்டு தப்ப முயன்றவர் சிக்கினார்

 

பெரம்பலூர், செப். 21: பெரம்பலூர் அருகேயுள்ள நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி மகன் பொன்னுசாமி (65). நேற்று (20ஆம்தேதி) மதியம் 4.30 மணியளவில் தனது வீட்டின் அருகே அமர்ந்து, விறகு அடுக்கிக் கொண்டிருந்தர். அப்போது இரண்டு பைக்கில் மது போதையில் வந்த நான்கு நபர்கள், பூட்டியிருந்த பொன்னுசாமியின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்து ரூ1.30 லட்சம் பணத்தை திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

சத்தம் கேட்டு வீட்டிற்குள் சென்ற பொன்னுசாமி திருடர்களை தடுத்தபோது அவர்கள் பொன்னு சாமி யைத் தாக்கினர். இதில் பொன்னுசாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்ததை யறிந்த திருடர்கள் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர். இதில் ஒரு திருடனை மட்டும் பொதுமக்கள் பிடித்தனர். திருடர்கள் தாக்கியதில் படுகாய மடைந்த பொன்னுசாமி பெரம்பலூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இது குறித்த பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவஇடத்திற்கு சென்ற மருவத்தூர் போலீசாரிடம் திருடனை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா, மருவத்தூர் சொத்தையன் தெருவை சேர்ந்தவர் வாசுவேதன் மகன் முருகராஜ் (27) என்பதும், அவரது நண்பர் சுரேஷ் மற்றும் 2 பேர் என 4 பேர் வந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீ சார் வழக்குப் பதிந்து திருட்டு நடந்தது குறித்து விசாரணை செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி