பெரம்பலூர் /அரியலூர் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

 

தா.பழூர், பிப்.23: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் சாத்தம்பாடி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கள்ளத்தனமாக பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சாத்தம்பாடி வடக்கு தெருவை சேர்ந்த தேவேந்திரன் மனைவி வேம்பு ( 53) என்பவரது டீக்கடையில் சோதனை செய்தனர்.

அப்போது டீக் கடையின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து வேம்புவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை