Saturday, July 6, 2024
Home » பெரம்பலூரில் பட்டப்பகலில் துணிகரம் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

பெரம்பலூரில் பட்டப்பகலில் துணிகரம் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

by Francis

 

பெரம்பலூர்,ஜூலை17: பெரம்பலூரில் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து மூன்றேகால் பவுன் நகை, ரூ.29,500 ரொக்கம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் ஊராட்சி, டைட்டானிக் நகரைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் துரைராஜ் (42). இவர் பெரம்பலூர் அருகேயுள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபிராமி (39). இவர் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள மெடிக்கல் ஷாப் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் 15ம்தேதி காலை 10 மணி அளவில் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு வந்தனர். அப்போது, வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறந்து கிடந்தது. இதில் இருந்த 3 பவுன் தாலிக்கொடி, கால்பவுன் தாலி குண்டு, காசு என மூன்றேகால் பவுன் நகைகளும், ரூ.29,500 ரொக்கப் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து பெரம்பலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சப்.இன்ஸ்பெக்டர் சண்முகம் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விரல் ரேகைப் பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தத் திருட்டு சம்பவம் எளம்பலூர் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

You may also like

Leave a Comment

eleven − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi