பெரம்பலூரில் தீயில் கருகிய கார் உதிரிபாக கடை: ரூ. 2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்

பெரம்பலூர்: பெரம்பலூரில்  தீயில் கருகிய கார் உதிரிபாக கடை ,ரூ. 2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளது. பெரம்பலூர் நான்கு வழிச்சாலையில் இளையராஜா என்பவர் ஓம்சக்தி வீல் எக்ஸ்பிரஸ் எனும் கார் உதிரி பாகம் மற்றும் டயர் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று தீபாவளி என்பதால் இளையராஜா நேற்று இரவு முழுவதும் கடையில் இருந்து விட்டு காலை 6 மணிக்கு தான் வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை 11.30 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வந்திருக்கிறது. அப்போது அந்த பகுதியில் சென்றவர்கள் கடையில் இருந்து புகை வருவதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

Related posts

திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை: மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்