பெரணமல்லூர் ஒன்றியத்தில் பண்ணை குட்டை அமைக்கும் பணிகளை அதிகாரி ஆய்வு

பெரணமல்லூர்:  பெரணமல்லூர் ஒன்றியத்தில் பண்ணைக் குட்டை அமைக்கும் பணிகளை மாவட்ட உதவி திட்ட இயக்குனர் இமயவரம்பன் ஆய்வு செய்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு மாதத்திற்குள் 1,118 பண்ணைக் குட்டைகளை அமைத்து, கின்னஸ் சாதனை செய்வதற்கான பணிகள் கடந்த வாரம் முதல் விரைவாக நடைபெற்று வருகிறது.அதன்படி, பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சிகளில் பண்ணைக் குட்டை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளாநல்லூர், ஆயிலவாடி, தாடிநொளம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பண்ணைக் குட்டை அமைக்கும் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட உதவி திட்ட அலுவலர் இமயவரம்பன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறுகையில், `பண்ணைக் குட்டை அமைக்கும் பணிகளை அடுத்த மாதம் 8ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். குறிப்பாக, நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கின்னஸ் உலக சாதனை புரியவும் கலெக்டர் அறிவுறுத்தலின்படி ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து திறம்பட இந்த பணிகளை முடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். ஆய்வின்போது, பிடிஓக்கள் பரணிதரன், தர், ஊராட்சி மன்ற தலைவர்கள், பணித்தள மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு