Saturday, August 3, 2024
Home » பென்னாகரத்தில் வீட்டில் மது பதுக்கி விற்ற மாமியார், மருமகள் கைது-2 பேர் தலைமறைவு; 567 பாட்டில்கள் பறிமுதல்

பென்னாகரத்தில் வீட்டில் மது பதுக்கி விற்ற மாமியார், மருமகள் கைது-2 பேர் தலைமறைவு; 567 பாட்டில்கள் பறிமுதல்

by kannappan

பென்னாகரம் : பென்னாகரத்தில் வீட்டில் மது பதுக்கி விற்ற மாமியார், மருமகளை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 567 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ராஜிவ்நகர் பகுதியில் மதுபானங்கள் வீட்டில் பதுக்கி விற்கப்படுவதாக பென்னாகரம் டிஎஸ்பி இமயவரம்பனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன், எஸ்ஐ துரை, மகளிர் இன்ஸ்பெக்டர் வான்மதி, வசந்தா மற்றும் தனிப்படை போலீசார் குமார், பாபு, சரவணன், முருகன் ஆகியோர் ராஜிவ் நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கமலேசன் மனைவி லட்சுமி (57), அவரது மகன் ரவி(39), மருமகள் கிருஷ்ணம்மாள்(34), அதே பகுதியை சேர்ந்த மாது மனைவி மகேஸ்வரி(40) ஆகியோர் தங்களது வீடுகளில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களது வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டதில் 567 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மது பதுக்கி விற்ற லட்சுமி, கிருஷ்ணம்மாள் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ரவி, மகேஸ்வரி ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதேபோல் தாசம்பட்டியை சேர்ந்த முனிராஜ்(50), அண்ணா நகரை சேர்ந்த இளங்கோவன்(38) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். …

You may also like

Leave a Comment

twenty − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi