பெண் தற்கொலை

பேரையூர்: பேரையூர் துர்கா நகரை சேர்ந்தவர் செந்தில். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள ஒயின்ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (28). செந்தில் வேலைக்கு சென்று வர டூவீலர் வாங்க வேண்டும் என மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. தற்போதுள்ள கஷ்டமான சூழ்நிலையில் டூவீலர் அவசியமா என ஜெயலட்சுமி கேட்க, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஜெயலட்சுமி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்