சிவகங்கை, ஆக. 10: மானாமதுரை சாஸ்தா நகரை சேர்ந்தவர் தனலெட்சுமி. இவர் கணவர் இறந்த நிலையில், 7 வயது மகனுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. நேற்று, தனலெட்சுமி மகனுடன் சிவகங்கை தெப்பக்குளத்தில் இறங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்து வந்த சிவகங்கை நகர் போலீசார் இருவரையும் மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.