Saturday, June 29, 2024
Home » பெண் குழந்தைகளை வளர்ப்பதில் சிறந்த நண்பராக பெற்றோர்கள் இருக்க வேண்டும்

பெண் குழந்தைகளை வளர்ப்பதில் சிறந்த நண்பராக பெற்றோர்கள் இருக்க வேண்டும்

by Karthik Yash

தஞ்சாவூர், ஜூன் 18: பெண் குழந்தைகளை வளர்ப்பதில் சிறந்த நண்பராக பெற்றோர்கள் இருக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஆலக்குடி கிராமத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட நீதிபதி மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் பேசுகையில், பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பெண் குழந்தைகளிடம் மற்றவர்களிடம் பழகும்போது நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குறித்த வேறுபாடுகள் பற்றி சொல்லி தர வேண்டும். பள்ளிகளுக்கு செல்லும் பெண் குழந்தைகளிடம் வெளியில் நடக்கும் விஷயங்களை பெற்றோர்கள் தாமாக முன் வந்து ஒரு நல்ல நண்பரை போல் அணுகி விசாரிக்க வேண்டும். போக்சோ சட்ட வழக்குகள் அதிகரித்து வருகிறது.

தற்போதுள்ள சமூக சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகள் தினம் தினம் அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். பெண் குழந்தையை வளர்ப்பதில் சிறந்த நண்பராக பெற்றோர்கள் இருக்க வேண்டும். மேலும் பொதுமக்களின் பிரச்னைகள் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் மாவட்ட மற்றும் தாலுகா அளவிலுள்ள மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தால் உடனடியாக தீர்வு கிடைக்கும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் செயலர் மற்றும் சார்பு நீதிபதி இந்திராகாந்தி முன்னிலை வகித்தார். அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுந்தரராஜன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரகாஷ், சமூக ஆர்வலர் கோவிந்தராசு சிறப்புரை ஆற்றினர். முகாம் இறுதியில் ஆலக்குடி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சாந்திசாமி நன்றி கூறினார். இம்முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் செய்திருந்தார்.

You may also like

Leave a Comment

nineteen + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi