பெண் காவலர் பாலியல் புகார் கூடுதல் எஸ்.பி சஸ்பெண்ட்

கோவை: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில், நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி சார்லஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் எஸ்.பியாக பணியாற்றி வருபவர் சார்லஸ். இவர் இதற்கு முன் ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் பணியாற்றினார். அப்போது, அங்கு பணியாற்றும் பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடந்தது. இதில், தவறு நடந்திருக்க முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், தற்போது நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பியாக இருக்கும் சார்லசை சஸ்பெண்ட் செய்து, கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டார். இந்த சஸ்பெண்ட் உத்தரவு கோவை சரக டிஐஜி. வாயிலாக, நீலகிரி மாவட்ட எஸ்.பி நேற்று கூடுதல் எஸ்.பி. சார்லசிடம் வழங்கினார். மேலும், தற்போது பணிபுரியும் நீலகிரி மாவட்டத்திலேயே கூடுதல் எஸ்.பி சார்லஸ் தங்கியிருக்க வேண்டும், அரசு அனுமதியில்லாமல், வேறு எங்கும் செல்ல கூடாது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கூடுதல் எஸ்.பி. சார்லஸ் கோவை, பொள்ளாச்சி, பவானி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார். பெண் காவலரின் பாலியல் குற்றச்சாட்டில் கூடுதல் எஸ்பி. சார்லஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!

வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை: இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை

சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!!