விருத்தாசலம்: நெய்வேலி காவல் நிலையத்தில் பெண் எஸ்ஐயாக இருப்பவர் ஆதி. இவர் 4 மாதத்திற்கு முன்பு ஆலடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது அங்கு இன்ஸ்பெக்டராக உள்ள விஜயகுமார், ஆதியை திட்டுவதும், இரட்டை அர்த்தங்களில் பேசுவதுமாய் இருந்ததாக எஸ்ஐ ஆதி தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், இந்த புகாரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்ததை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் 12 வாரத்திற்குள் இந்த புகார் மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து டிஐஜி, எஸ்.பி ஆகியோர் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதில் கலந்துகொண்டு இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பெண் எஸ்ஐ ஆதி ஆகியோர் தங்கள் பதிலை அளித்தனர். …