பெண்ணுக்கு சரமாரி அடி-உதை

சேலம், ஜன.3: வாழப்பாடி அருகே பெண்ணை சரமாரி தாக்கிய 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள பாப்பநாயக்கன்பட்டி மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் மனைவி சங்கீதா (37). இவர், கடந்த 31ம் தேதி மதியம் தனது மகன் சூரியபிரகாஷ், தங்கை மகன் மணிகண்டன் ஆகியோருடன் பாப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தப்பகுதியில் நின்றிருந்தனர். அப்போது அவ்வழியே பைக்கில் தரன் என்பவர் வந்துள்ளார். அவர், 3 பேர் மீதும் மோதுவது போல் பக்கத்தில் வந்து திரும்பியுள்ளனர்.

இதனை சங்கீதாவும், மணிகண்டனும் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த தரனின் உறவினரான ரகு மனைவி செல்வி (40), முருகன், செல்வராஜ் ஆகியோர் அப்படி தான் வண்டியில் வருவார்கள் எனக்கூறி சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதில், சங்கீதாவை 3 பேரும் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். படுகாயமடைந்த சங்கீதா பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுபற்றி ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி பெண்ணை தாக்கிய செல்வி, முருகன், செல்வராஜ் ஆகிய 3 பேர் மீதும் தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி