பெண்ணுக்கு கருக்கலைப்பு கணவர், மாமியார் மீது புகார்

பொன்னேரி: சோழவரம் அடுத்த செங்குன்றம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவருக்கும் முபினா என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாளில் இருந்து 30 சவரன் நகை, ரூ.5 லட்சம் கேட்டு தினமும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினார். மேலும், முகமது முஸ்தபா மனைவிக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கருவை கலைத்து வீட்டை விட்டு துரத்தினார். அவருக்கு ஆதரவாக மாமியார் ஷாஜகான் மற்றும் கணவரின் தங்கை நைமுனிசா ஆகியோர் சேர்ந்து கொடுமைபடுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த முபினா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகிதா அன்னா கிறிஸ்டி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்….

Related posts

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்

இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ஊர், ஊராக அழைத்துச் சென்று சித்ரவதை: ஜம்முவில் வாலிபர் கைது