பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு

உளுந்தூர்பேட்டை, ஜூன் 10: உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.இந்த நிலையில் கோயில் விழாவுக்கு வந்த கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வடகராம்பூண்டியைச் சேர்ந்த சுமதி என்ற பெண் அணிந்திருந்த மூன்று பவுன் செயினை மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.ஒன்றரை லட்சம் இருக்கும். இது குறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சுமதி தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை