பெண்ணிடம் செயின் பறிப்பு

திங்கள்சந்தை, மார்ச் 30: திங்கள்சந்தை அருகே உள்ள கண்ணோடு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் மனைவி லைசா (54). இவர் நேற்று முன்தினம் முரசங்கோடு வாலன்குளம் பகுதியில் புல்பறிக்க சென்றார். பின்னர் மாலை புல் கட்டுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பூச்சிக்காடு பகுதியில் வந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 2 1/2 பவுன் தங்க செயினை பறித்தனர். லைசா திருடன் திருடன் என கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் 2 வாலிபர்களும் செயினுடன் தலைமறைவாகி விட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்