பெட்ரோல் டேங்கை நிரப்புங்கள்; மோடி அரசின் தேர்தல் ஆஃபர் முடிவுக்கு வர உள்ளது: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: மக்களே உடனடியாக உங்கள் வண்டிகளில் பெட்ரோல் டேங்கை நிரப்புங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அரசியல் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்; மக்களே உடனடியாக உங்கள் வண்டிகளில் பெட்ரோல் டேங்கை நிரப்புங்கள். மோடி அரசின் தேர்தல் ஆஃபர் முடிவுக்கு வர உள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்