பெட்டி கடைக்காரர் அடித்து கொலை: வாலிபர் கைது

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (55). அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன், இவரது கடை அருகில் தெரு நாய்கள் பள்ளம் தோண்டியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், அவற்றை அடித்துள்ளார். இதை பார்த்த கொருக்குப்பேட்டை காமராஜர் நகரை சேர்ந்த சுரேஷ் (29), அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுரேஷ், கோவிந்தராஜை தாக்கி, கீழே தள்ளியுள்ளார். இதில், கோவிந்தராஜ் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கோவிந்தராஜ் இறந்தார். புகாரின் பேரில்ஆர்.கே.நகர் போலீசார்  கொலை வழக்கில் சுரேஷை கைது செய்தனர்….

Related posts

துபாய் நட்சத்திர ஓட்டல்களில் பிரபல நடிகைகள் உள்பட 50 இளம்பெண்கள் சிக்கி தவிப்பு

அவதூறு, கொலை மிரட்டல்: பாஜ நிர்வாகிகள் கைது

ஜாபர்கான்பேட்டை பகுதியில் சிறுவன் வெட்டிக்கொலை: அடையாறு ஆற்றில் சடலம் வீச்சு