பூவநாதபுரத்தில் புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு

 

சிவகாசி, ஜூலை 26: சிவகாசி அருகே பூவநாதபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜகிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக சிவகாசி யூனியன் துணைத் தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான விவேகன்ராஜ் கலந்து கொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கலைமணிகாளிராஜன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஈஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பத்மினி, உதவி செயற்பொறியாளர் தென்பாண்டி தமிழ், உதவி பொறியாளர் ராமமுனீஸ்வரன், ஊராட்சி செயலாளர் நாகராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி