பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

இடைப்பாடி: விடுமுறை தினமான நேற்று பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் விசைப்படகில் சென்று உற்சாகமடைந்தனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு, 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. செக்கனூர், பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை நீர்மின் கதவணை வழியாக செல்கிறது. தற்போது மின்சார உற்பத்தி நடைபெறுகிறது. இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று இடைப்பாடி அருகே பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து, விசைப்படகில் பயணித்து மகிழ்ந்தனர். இதில் சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து சிறுவர்கள், மாணவி பெண்கள் என குடும்பம் குடும்பமாக விசைப்படகியில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் இங்குள்ள மீன் கடைகள், ஹோட்டல்களில் கூட்டம் காணப்பட்டது. பூலாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி