பூந்தமல்லி சுப்பிரமணியசுவாமி கோயிலில் 1008 பால்குடம் அபிஷேகம்

பூந்தமல்லி: பூந்தமல்லி சீரடி சாய்நகர் பகுதியில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறும். அதன்படி நேற்று சிறப்பு பாலாபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றன. முன்னதாக பூந்தமல்லி பனையாத்தம்மன் கோயிலில் இருந்து 1008 பால் குடங்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து சுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி தேவசேனாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து வள்ளி, தேவசேனா மற்றும் சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ஜி.ஆர்.திருமலை, கவுன்சிலர் கவிதா சுரேஷ், ருத்ரவேல், எல்.என்டி.நாகராஜ், மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் ஆலய திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு