பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா கபடி போட்டி: சா.மு.நாசர் எம்எல்ஏ பரிசு வழங்கினார்

 

திருவள்ளூர்: பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செம்பரம்பாக்கம் ஊராட்சியில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு ஒன்றிய செயலாளர் கமலேஷ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் திருமலை, பொதுக்குழு உறுப்பினர் குமார், ஒன்றிய நிர்வாகிகள் ஜனார்தனன், இளையான், புகழேந்தி, பிரபாகரன், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார்.இந்த விழாவில் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இறுதிப்போட்டிய துவக்கி வைத்தார்.

இந்த போட்டியில் முதல் பரிசினை பாக்கம், அம்மன் சைலட் அணியும், 2வது பரிசினை தண்டலம், ஜெட் அம்பேத்கர் அணியும், 3வது பரிசினை நொளம்பூர், சவிதா அணியும், 4வது பரிசினை செம்பரம்பாக்கம், செம்பை பாய்ஸ் அணியும் வென்றது. இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ வெற்றி பெற்ற பாக்கம் அம்மன் சைலட் அணிக்கு முதல் பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார்.

அதேபோல் மாநில ஆதிதிராவிட நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தண்டலம் ஜெட் அம்பேத்கர் அணிக்கு 2வது பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார். மேலும் ஒன்றிய செயலாளர் கமலேஷ் 3வது, 4வது பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் பிரியாசெல்வம், கிளை செயலாளர்கள் சங்கரன், விநாயகம், ராஜாமணி, ஸ்ரீதர், குமார், கேசவன், பாஸ்கர், முரளிதரன், ஞானமூர்த்தி, மனோஜ்குமார், பரிமேலழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை