பூந்தமல்லி, ஆவடி, பொன்னேரி பகுதியில் 1,025 கோடியில் 30 கி.மீ.க்கு சென்னை வெளிவட்ட சாலை

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, ஆவடி மற்றும் பொன்னேரி வட்டங்களுக்கு உட்பட்ட சென்னை வெளிவட்ட சாலையின் 2ம் கட்டமாக 1,025 கோடி செலவில் நெமிலிச்சேரி முதல் பாடியநல்லூர் வழியாக திருவொற்றியூர் – பொன்னேரி – பஞ்செட்டி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையில் 30.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 6 வழித்தட பிரதான சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.மேலும், நெடுஞ்சாலை துறையில் 2018-19 மற்றும் 2019-20ம் ஆண்டுகளுக்கான 94 தட்டச்சர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு அமைச்சுப்பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்