Sunday, July 7, 2024
Home » பூந்தமல்லி அருகே அதிகாலையில் பரபரப்பு: உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து பாலத்திலிருந்து குதித்த வாலிபர் சாவு: திருமணமாகாத விரக்தியா? போலீஸ் விசாரணை

பூந்தமல்லி அருகே அதிகாலையில் பரபரப்பு: உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து பாலத்திலிருந்து குதித்த வாலிபர் சாவு: திருமணமாகாத விரக்தியா? போலீஸ் விசாரணை

by kannappan

சென்னை: பூந்தமல்லி அருகே உடலில் தீ வைத்து பாலத்தில் இருந்து கீழே குதித்த வாலிபர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை வில்லிவாக்கம் தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு சத்யநாராயணன் (26), சூரியநாராயணன் (24) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் சூரியநாராயணனுக்கு திருமணமாகி விட்டது. சத்யநாராயணனுக்கு திருமணமாகவில்லை. இதனால் மன வேதனையில் இருந்தார். இவர், திருநின்றவூரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி கொண்டு வடபழனியில் உள்ள ஒரு தனியார் மடத்தில் சமையலராக வேலை செய்து வந்தார்.இந்நிலையில், சத்யநாராயணன் நேற்று வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்றார். இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மாமா, பல இடங்களில் தேடினார். மடத்துக்கும் போன் செய்து கேட்டார். வரவில்லை என்பது தெரியவந்தது. நேற்று அதிகாலை சத்யநாராயணன் பூந்தமல்லி அருகே நெமிலிச்சேரி பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். காவல்சேரி என்ற இடத்தில் பைக்கை நிறுத்தினார். சிறிது நேரத்தில் பைக் டேங்கில் இருந்த பெட்ரோலை பிடித்து உடலில் ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீ பரவியதில் அலறி துடித்தார். பின்னர் பாலத்தில் இருந்து கீழே குதித்தார். பலத்த காயத்துடன் சிறிது நேரத்தில் உடல் எரிந்து பரிதாபமாக இறந்தார்.தகவலறிந்து வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் சோபா தேவி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வழக்குப்பதிவு செய்து, சத்யநாராயணனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்….

You may also like

Leave a Comment

twenty − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi