பூதப்பாண்டி அருகே வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பூதப்பாண்டி, செப்.30 : ஆரல்வாய்மொழியை அடுத்துள்ள வெள்ளமடம் கிறிஸ்துநகர் பகுதியில் பறக்கும் படை தனி தாசில்தார் சுரேஷ்குமார் மற்றும் துணை தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த சொகுசு டெம்போ டிராவலர் வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கேரளாவிற்கு கொண்டு செல்வதற்காக 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரேஷன் அரிசியையும், அதை கடத்த பயன்படுத்திய சொகுசு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்