பூதப்பாண்டி அருகே பைக் விபத்தில் 3 பேர் காயம்

பூதப்பாண்டி, ஆக.11: பூதப்பாண்டியை அடுத்த ரத்தினம்புரம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சைமன் ராஜா (27). கார் மெக்கானிக். அதே பகுதியை சேர்ந்தவர் வேதபுஷ்பம் (50). வீட்டு வேலை செய்து வருகிறார். 2 பேரும் நாகர்கோவிலில் இருந்து தடிக்காரகோணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தெரிசனங்கோப்பு பெரிய பாலம் பகுதியில் வந்தபோது எதிரே வந்த புத்தேரி பகுதியை சேர்ந்த ரமேஷ் (47) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சைமன் ராஜா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சைமன் ராஜா, வேதபுஷ்பமும், ரமேஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சைமன் ராஜா, வேதபுஷ்பம் ஆகியோர் உடனடியாக சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரமேஷ் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை