புஷ்பா ஐசரி வேலன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழக முன்னாள் துணை அமைச்சர் ஐசரி வேலனின் மனைவியும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும் மற்றும் வேல்ஸ் இண்டர்நேஷனல் உரிமையாளரும், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஐசரி கே.கணேஷின் தாயாருமான புஷ்பா ஐசரி வேலன் (75), வயது முதிர்வு காரணமாக நேற்று காலை 9.30 மணியளவில் சென்னையில் காலமானார். அவரது இறுதி ஊர்வலம் இன்று காலை 9 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, தாழம்பூர் வேல்ஸ் வளாகத்தை அடைகிறது. பிறகு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. புஷ்பா ஐசரி வேலன் மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘திரைப்படக்கலைஞரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த ஐசரி வேலன் துணைவியாரும், கல்வியாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷின் தாயாருமான புஷ்பா ஐசரி வேலன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பாசமிக்க தாயாரை இழந்து வாடும் ஐசரி கணேஷுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை