புளியம்பட்டி ரயில்வே கேட் இன்று மூடல்

 

தூத்துக்குடி, ஏப்.22: பராமரிப்பு பணிகள் காரணமாக கங்கை கொண்டான் அருகே புளியம்பட்டி ரயில்வே கேட் இன்று மூடப்படுகிறது. நெல்லை அருகே கங்கைகொண்டான்- புளியம்பட்டி ரயில்வே கேட்(கிராசிங் லெவல் எண்.9) இன்று பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுகிறது. இன்று இரவு 8 மணி முதல் நாளை(23ம் தேதி) காலை 8 மணி வரை கேட் மூடப்பட்டிருக்கும். எனவே அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்தும்படி கேட்டு கொள்ளப்படுகின்றனர். இத்தகவலை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை