திருச்சுழி, ஜூலை 10: திருச்சுழி அருகே உள்ள முருகையாபுரத்தை சேர்ந்த முத்துபாண்டி(43) இவர் கூலி தொழிலாளி. இவருக்கு முருகேசபாண்டி (15) என்ற மகன் உள்ளார். இவர் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 8ம் தேதி வீட்டில் சமைக்கப்பட்ட புளிக்குழம்பை முத்துபாண்டியும், முருகேசபாண்டியும் ஊற்றி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டு உடனடியாக திருச்சுழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக முருகேசபாண்டியை அருப்புக்கோட்டை அரசு மருத்துவணையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக பலியானார்.