புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: நாளை மற்றும் நாளை மறுநாள் (20, 21ம் தேதி) தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 3வது ரயில் பாதை அமைக்கும் பணி மற்றும் மின்னணு இன்டர்லாக்கிங் பணி நடைபெறவுள்ளதால் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தை  கடந்து செல்லும் புறநகர் சிறப்பு ரயில்களின் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தாம்பரம் வரை செல்லும் குறிப்பிட்ட சில புறநகர் ரயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதன் காரணமாக புறநகர் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட புறநகர் சிறப்பு ரயில்களுக்கான புதிய கால அட்டவணை மார்ச் 20 மற்றும் 21 தேதிகளில் மட்டும் நடைமுறையில்  இருக்கும். இவ்வாறு ரயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை