புரோ கபடி லீக்தொடர்: தெலுங்கு அணியை வீழ்த்தி அரியானா முதல் வெற்றி

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 17வது லீக் போட்டியில் புனேரி பால்டன்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாட்னா 38-26 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.  தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் முதல் பாதியில் அரியானா 23-19 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. 2வது பாதியிலும் முன்னிலையை தொடர்ந்த அரியானா 39-37 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை ருசித்தது. முதல் 2 போட்டியிலும் தோல்வியை சந்தித்த அரியானா நேற்று வெற்றி கணக்கை தொடங்கியது. இன்று இரவு 7.30மணிக்கு தபாங் டெல்லி-பெங்கால்வாரியர்ஸ், இரவு 8.30 மணிக்கு உ.பி.யோத்தா-குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. …

Related posts

குவாலியரில் நாளை வங்கதேசத்துடன் முதல் டி20 போட்டி: இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக்சர்மா-சஞ்சுசாம்சன் களமிறங்க வாய்ப்பு

ஈஸ்வரன் 191, ஜுரெல் 93 இதர இந்தியா 416 ரன் குவிப்பு: 2வது இன்னிங்சில் மும்பை திணறல்

மகளிர் உலக கோப்பை டி20 வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தென் ஆப்ரிக்கா அபார வெற்றி