புனித் ராஜ்குமார் பட டிரைலர் பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: கன்னடத்தில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி, தனது 46வது வயதில் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இந்நிலையில், அவர் நடித்த ‘கந்தாடகுடி’ என்ற படம், வரும் 28ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதை முன்னிட்டு நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் பற்றி பிரதமர் மோடியுடன் புனித் ராஜ்குமார் நேரடியாகப் பகிர்ந்துகொள்ள விரும்பினார் என்று, புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினி டிவிட்டரில் தெரிவித்தார். அதோடு, பிரதமர் மோடியுடன் இணைந்து புனித் ராஜ்குமார் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவையும் வெளியிட்டார்.இதையடுத்து ‘கந்தாடகுடி’ படக் குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘உலகம் முழுவதும் இருக்கும் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் அப்பு (புனித் ராஜ்குமார்) வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் புத்திசாலித்தனமான ஆளுமையும், ஆற்றலும் நிறைந்தவர் மட்டுமின்றி, ஒப்பற்ற திறமையால் ஆசிர்வதிக்கப்பட்டவர். ‘கந்தாடகுடி’ என்பது இயற்கை அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குமான காணிக்கையாகும். இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்….

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு