புதுமைப்பெண் திட்டம் விழிப்புணர்வு முகாம்

 

சிவகாசி, ஜூலை 25: சிவகாசியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பெண்களுக்கான வாழ்வியல், பெண்கள் நலன், பெண்களுக்கான தலைமைப்பண்புகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு அரசு அலுவலர்கள் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) தங்கலட்சுமி, கல்லூரி முதல்வர் அசோக் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை