புதுமாப்பிள்ளை திடீர் மாயம்

 

நெல்லை,பிப்.5:நெல்லை அருகே நாளை மறுதினம் (7ம் தேதி) திருமணம் நடைபெறும் நிலையில் திடீரென மாயமான புதுமாப்பிள்ளையை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், பாளை அருகேயுள்ள கீழநத்தம், கீழூர் பகுதியைச் சேர்ந்தவர் தபசு (61). இவரது மகன் மாடசாமி என்ற மகேஷ் (31). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவருக்கு நாளைமறுதினம் (7ம் தேதி) திருமணம் நடக்க இருக்கிறது. இந்நிலையில் கடந்த 31ம் தேதியன்று அவரது குடும்பத்தினர் திருமண பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த மாடசாமியை காணவில்லை. இதனால் பதறிய குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றிய எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த நெல்லை தாலுகா இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார், மாயமான புதுமாப்பிள்ளை மாடசாமியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை