புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி திறப்பு

குமாரபாளையம், மார்ச் 15: குமாரபாளையம் நகராட்சி காவேரி நகரில், சிதிலமடைந்த அங்கன்வாடி மையம் ₹3.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, அங்கன்வாடி மையத்தை திறந்து குழந்தைகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் வித்யலட்சுமி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், வார்டு கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி செல்வராஜ், வேல்முருகன், ஜேம்ஸ், திமுக மாவட்ட தொழிலாளரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், வார்டு செயலாளர் கோவிந்தன், நிர்வாகிகள் விக்னேஷ், ஜோதி, அங்கன்வாடி பணியாளர்கள் குணசுந்தரி, விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்