புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த சென்னை போட்டோகிராபர் சாவு

புதுச்சேரி, அக். 27: சென்னை சவுகார்பேட்டை மின்ட் வீதியைச் சேர்ந்தவர் பாலாஜி (53). இவர் அப்பகுதியில் சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ கடை வைத்துள்ளார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இதனிடையே தொழில் நிமித்தமாக கடந்த 24ம் தேதி அவர் புதுச்சேரி வந்ததாக கூறப்படுகிறது. புதிய பஸ் நிலையம் வந்தடைந்த அவர், அதை ஒட்டியுள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். 24ம் தேதி பிற்பகல் தனது அறைக்குள் சென்றவர் மறுநாள் மாலை வரை வெளியே வராத நிலையில் சந்தேகமடைந்த விடுதி பணியாளர்கள்உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் விடுதி அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது தரையில் அவர் பிணமாக கிடந்த நிலையில், உடலை மீட்ட போலீசார் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது அறையை சோதனையிட்டபோது மதுபாட்டில்கள் கிடந்த நிலையில், மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்தாரா அல்லது வேறு காரணமா? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு