புதுச்சேரி பட்ஜெட் 22ம் தேதி தாக்கல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை செயலர் முனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 15வது சட்டப்பேரவையின் 3வது கூட்டத்தொடரில் 2வது பகுதியாக வரும் ஆகஸ்ட் 22ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுமென்றும், அன்றைய தினத்தில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை பேரவை முன் முன்னிலைப்படுத்துவார் என்றும், சட்டப்பேரவை தலைவர் அறிவித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. 22ம் தேதி பட்ஜெட் தாக்கலுக்குப்பின் அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதை இறுதி செய்யும்….

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்