புதுச்சேரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே திருமண நிகழ்ச்சிக்காக வந்த காரின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த காரில் முத்துகுமாரசாமி மற்றும் கார் ஓட்டுநர் முத்துக்குமார் ஆகியோர் வந்துள்ளனர். ரெட்டியார்பாளையம் மூலக்குளம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் கார் முழுவதுமாக நொறுங்கி காரில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து கிரேன் உதவியுடன் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தூங்கியதால் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவரை தாண்டி எதிரே வந்த காரின் மோதியது தெரியவந்தது. மேலும் காரின் முன் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்து புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே