Tuesday, September 17, 2024
Home » புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் பற்றிய புகார் தெரிவிக்கலாம்: காவல்துறை அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் பற்றிய புகார் தெரிவிக்கலாம்: காவல்துறை அறிவிப்பு

by MuthuKumar

புதுக்கோட்டை, ஜூலை 29: புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் பற்றிய புகார் தெரிவிக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமான புகார் மற்றும் தகவலை, பொது மக்கள் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறைக்கு 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம். மேலும் தஞ்சாவூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பிக்கு 8300021400 என்ற எண்ணிலும், புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐக்கு 9578720791 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். புகார் மற்றும் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

twenty + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi