புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமங்களில் நாட்டுக்கோழி,வெள்ளாடு வளர்ப்பு தீவிரம்-பல்வேறு மாவட்டங்களுக்கு அதிகளவில் அனுப்பி வைப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்க்கப்படும் நாட்டுகோழி, வெள்ளாடுகளை கோயம்புத்தூர் கரூர், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களுக்கு அதிகளவில் அனுப்பி வருவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே இருப்பவர்கள். மேலும் மாவட்டத்தில் உள்ள 497 பஞ்சாயத்துகளில் உள்ள குக்கிரமங்களில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது விவசாயம் குறைய குறைய கால்நடை வளர்ப்பும் குறைந்து வருகிறது. அதேநேரம் கிராமங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பு அதிகரித்து வருகிறது. இதேபோல் வெள்ளாடுகள் வளர்ப்பும் அதிகரித்து வருகிறது. கிராமங்களில் நாட்டுகோழி, வெள்ளாடுகளின் வளர்ப்புக்கு பெரிய அளவில் பொருட்செலவு ஏற்படுவதில்லை. நாட்டுக்கோழி குஞ்சுகளை வாங்கி விட்டு விட்டால்போதும். அதற்காக பெரிய அளவில் மெனக்கட தேவையில்லை. வீட்டில் உள்ள வைக்கோல் போரில் உள்ள நெல்லை சாப்பிட்டு உயிர் வாழும். அதேபோல் வயல்பகுதிக்குசென்று மேய்ந்து விட்டு வந்துவிடும்.இரவு நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் கோழிகளை பிடித்து அடைத்து வைக்க தேவையில்லை. வீட்டின் அருகே உள்ள மரங்களில் தானாகவே வந்து அடைந்து விடும். வெள்ளாடுகளை காட்டு பகுதியில் விரட்டி விட்டால் மேய்ந்துவிட்டு மீண்டும் மாலை வீடு திரும்பி விடும். இதனால் வீட்டில் உள்ளவர்களக்கு எந்த பிரச்னையும், வேலையும் இல்லை. இதனால் கிராமங்களில் ஏழை, பணக்காரர் என அனைத்து வீடுகளிலும் நாட்டுகோழிகள், வெள்ளாடுகளின் வளர்ப்பு கண்டிப்பாக இருக்கும். இப்படி வளர்க்கும் கோழிகள் மற்றும் வெள்ளாடுகளை கிராமத்தினர் தேவையானவற்றை வீட்டிற்கு வைத்துகொண்டு சில கோழிகளை வியபாரிகளிடம் விறப்னை செய்வார்கள்.கிராமங்களில் வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை வியாபாரிகள் வந்து செல்வார்கள். அப்போது விற்பனை செய்ய வேண்டிய கோழிகளை விற்பனை செய்து அந்த பணத்தில் குடும்பத்திற்கு தேவையான செலவுகளை கவனித்து கொள்வார்கள். இதபோல் வெள்ளாடுகளையும் விற்பனை செய்வார்கள். இப்படி வாங்கப்பட்ட கோழிகள் மற்றும் வெள்ளாடுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கரூர், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைத்து வருகின்றனர்.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நாட்டு கோழி வளர்ப்பு மற்றும் வெள்ளாடுகளின் வளர்ப்பு அதிகம். இதனால் இங்கு கோழிகள் மற்றும் வெள்ளாடுகள் அதிக அளவில் கிடைக்கிறது. இதனை பயன்படுத்தி நாங்கள் குக்கிராமங்களுக்கு சென்று வீட்டில் உள்ள கோழிகளை ஒவ்வொன்றாக வாங்கி ஒரு வார காலத்திற்குள் நூற்றுக்கணக்கான கோழிகளை வாங்கி அதிற்கான தீவனங்களை வைத்து விடுவோம்.பின்னர் மொத்தமாக நான்கு ஐந்து வியாபாரிகள் ஒன்று சேர்ந்து பேருந்து மூலமாகவோ அல்லது தனியாக வேன் எடுத்துக்கொண்டோ கரூர், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வோம். இதேபோல் வெள்ளாடுகளையும் வீட்டிலும் கீரனூர், புதுக்கோட்டை, விராலிமலை சந்தைகளில் வாங்கி வேன் மூலம் கொங்கு மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வோம். எங்களுக்கு நல்ல முறையில் லாபம் கிடைத்து வருகிறது. இதனால் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறோம் என்றனர்….

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்