புதுக்கோட்டை புது தெருவில் வரத வீரஆஞ்சநேயர் கோயிலில் பாலாலயம்

புதுக்கோட்டை, ஜூலை 5: புதுக்கோட்டை திருக்கோகர்ணம், புதுத்தெருவில் இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த வரத வீர ஆஞ்சநேயர் கோயிலில் பாலாலயம் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு ஹோமம் பல்வேறு சிறப்பு பூஜைகள் ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனை மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்களால் ஆலயத்தில் பாலாலயம் வைபவம் சிறப்புடன் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள், அலுவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றியாளர்களைக் கொண்டு அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களை ஊக்கப்படுத்த வகுப்பு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை