புதுக்கோட்டை நகர் பகுதியில் மின்விநியோகம் நாளை நிறுத்தம்

 

புதுக்கோட்டை, ஜூன் 14: புதுக்கோட்டை நகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (15ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறது. எனவே இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் புதிய பேருந்து நிலையம், லெட்சுமிபுரம், சாந்தநாதபுரம், குமுந்தாங்குளம், தெற்கு 4ம் வீதி, மரக்கடை வீதி, திருவள்ளுவர் நகர், சுப்பிரமணியர் நகர், சிராஜ் நகர், ஆண்டவர் நகர், சு.ஆ.ஏ நகர், மேலராஜவீதி, கீழராஜவீதி, தெற்குராஜவீதி, வடக்குராஜ வீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்குடிரோடு,

காந்திநகர், அய்யனார்புரம், முடுமுளுநகர், நிஜாம்காலனி, சத்தியமூர்த்திநகர், அசோக்நகர், தமிழ்நகர், சக்திநகர், முருகன்காலனி, பாலாஜி நகர், திருநகர், சின்னப்பாநகர், நு.ஏ.சு. நகர், டைமண்ட் நகர், கோல்டன் நகர், சேங்கைதோப்பு, மருப்பிணி ரோடு, கலீப்நகர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி,

ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமி நகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த மின் தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது என தமிழ்நாடு மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு