புதுக்கோட்டை சமத்துவபுரத்தில் பள்ளி பூட்டை உடைத்து பொருட்கள் சூறை

 

புதுக்கோட்டை, ஜூன் 15: புதுக்கோட்டை சமத்துவபுரத்தில் பள்ளி பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சூறையாடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை சமத்துவபுரத்தில் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு வழக்கம் போல் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து பூட்டி சென்றனர். இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு பெரிய அளவில் உள்ள டி.வி.யை எடுக்க முயன்றனர். அது வராததால் அதை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

மேலும் அங்கு இருந்த மின்விசிறிகளையும் கழற்றி சென்றுள்ளனர். நேற்று காலையில் வழக்கம்போல பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் பள்ளி திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் திருக்கோகர்ணம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளியை சூறையாடி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்