புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் (சிஐடியு) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திட்டத் தலைவர் சித்தையன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர்தர், உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங்க் மேன் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி